கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில்  சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு இடர் படி ரூ.800-லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்க ரூ.3.24 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.