உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 13 வயது சிறுமி ஒருவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​மர்ம நபர்கள் அவளை கரும்பு தோட்டத்திற்கு கடத்தி சென்றனர். அவர்கள் அந்த சிறுமி வாயில் சேற்றை போட்டும், கரும்புகையால் கண்களை பிடுங்கியும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதியினர் அளித்த தகவலின் பேரில் எஸ்பி நைபால் சிங் சம்பவ இடத்துக்குச் சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கொலைக்கு முன் சிறுமி கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக தடயவியல் நிபுணர்கள் கூறினர்.