இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகளின் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், காசாவில் உள்ள இந்தியர்களுக்காக மத்திய அரசு அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது. காசாவின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, பாலஸ்தீனத்தில் உள்ள இந்திய தூதரகம் (X) ட்விட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்கள் இந்திய தூதரகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். கடந்த சனிக்கிழமை தொடங்கிய போர் 5 வது நாளை எட்டியுள்ளது. 24*7 அவசர உதவி எண்/தொடர்பு: தொலைபேசி: +972-35226748 தொலைபேசி: +972-543278392 மின்னஞ்சல்: [email protected]