கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளான். பள்ளி படிக்கும்போது சிறுவனுக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுவன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் சிறுவனை கைது செய்தனர். அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.