கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள ஹருகேரியில் சச்சின் (21) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 18 வருடங்களாக சிறுநீர் கோளாறு பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துள்ளது. இதனால் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக இதற்கு சிகிச்சை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால்பெற்றோருக்கு உடல் நலக் கோளாறுகள் இருந்த காரணத்தினால் அவர்களால் சிறுநீரகத்தை தானம் செய்ய முடியவில்லை. அதனால் இவரது பாட்டி உத்தவ்வா தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முடிவு செய்துள்ளார்.

அந்த வகையில் இன்று இருவருக்கும் விஜயபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது . இதனையடுத்து பேரன் சச்சின் கூறியதாவது, எனக்கு எனது பாட்டி எனக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். அவரை பத்திரமாக பார்த்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவேன். அவருக்கு நான் மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டுள்ளேன் என உருக்கமாக கூறியுள்ளார். மூதாட்டியின் இந்த செயல் அவரது குடும்பம் மட்டுமல்லாமல் பலரிடமும்  பாராட்டையும் மதிப்பையும் பெற்று வருகிறது.