வி.இசட் துரை டைரக்டில் சுந்தர். சி கதாநாயகனாக நடித்திருக்கும் தலைநகரம்-2 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் பாலக் லல்வாணி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் டைரக்டர் சுந்தர்.சி கலந்துகொண்டு பேசியபோது “சினிமாவில் இது போன்ற விழாக்கள் நடப்பது அரிதாகிவிட்டது. இதன் காரணமாக தான் இசை விழாக்களிலேயே அனைவருக்கும் நன்றி சொல்லும் நிலைமை இருக்கிறது.

இப்படத்தை 350 தியேட்டர்களில் போடுகிறார்கள் என கேள்விப்பட்டதும் பயந்து விட்டேன். தற்போதெல்லாம் படம் ரிலீசாகும் நாளிலேயே தியேட்டரில் கூட்டல் இல்லாமல் சினிமா காட்சிகள் ரத்தாகும் நிலைமை உள்ளது. அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் தான் நாம் இருக்கிறோம். பெரிய ஹீரோக்கள் படங்களுக்குத் தான் 300 தியேட்டர் போடுகின்றனர். எனினும் எல்லாவற்றையும் தாண்டி தலைநகரம்-2 திரையரங்குகளில் ஓடுவது மகிழ்ச்சியை தருகிறது” என்று அவர் பேசினார்.