ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டில் 2011-ல் வெளியான படம் “7-ஆம் அறிவு”. இந்த படத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடித்து இருந்தனர். இப்படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலின் இப்போது அளித்த பேட்டி ஒன்றில் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி கூறியிருக்கிறார்.

அதாவது, 7-ஆம் அறிவு படத்தில் இட ஒதுக்கீடு பற்றிய காட்சி ஒன்று இருக்கும். ஸ்ருதிஹாசன் அந்த வசனத்தை பேசியிருப்பார். முழு படத்தையும் பார்த்த சூர்யா அந்த வசனத்தை நீக்குமாறு என்னிடம் கூறினார். ஒரு வசனம் தானே இருக்கட்டும் என நான் சொல்லிவிட்டேன்.

அந்த நேரத்தில் தனக்கு இருந்த அரசியல் புரிதல் அவ்வளவுதான். எனினும் தற்போது அதை அனுமதித்து இருக்கக் கூடாது என உணர்கிறேன். இதனிடையே முருகதாஸ் செய்தது தவறு என சொல்ல முடியாது. அது அவரது அரசியல் புரிதல்” என உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.