சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அதிரடியான மணல் கடத்தல் வீடியோ வெளியாகிப் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு லாரியை அரசு அதிகாரிகள் விடாமல் விரட்டிச் சென்றனர். அதிகாரிகளின் வாகனம் தங்களை நெருங்குவதை உணர்ந்த கடத்தல்காரர்கள், ஒரு விபரீதமான முடிவை எடுத்தனர். தப்பியோடும் போதே லாரியின் பின்புறக் கதவைத் திறந்து விட்டு, லாரியில் இருந்த மணலைச் சாலையிலேயே கொட்டியபடி அதிவேகமாக லாரியை ஓட்டிச் சென்றனர்.
The Tehsildar noticed members of the sand mafia transporting sand in a truck and attempted to intercept them. When he signaled the vehicle to stop, the driver instead accelerated, deliberately scattering sand across the road and dumping the loaded material from the truck to… pic.twitter.com/V6a1INhapj
— Oxomiya Jiyori 🇮🇳 (@SouleFacts) January 9, 2026
அதிகாரிகள் தங்களைத் தொடர்ந்து துரத்த முடியாமல் சாலையை மறைக்கும் வகையிலும், தங்கள் மீதான ஆதாரத்தை அழிக்கும் வகையிலும் கடத்தல்காரர்கள் இவ்வாறு செய்துள்ளனர். சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடுரோட்டில் மணலைக் கொட்டியபடி லாரி சீறிப்பாயும் இந்தக் காணொளி இப்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “கடத்தல்காரர்களின் துணிச்சலும் அதிகாரிகளின் விடாமுயற்சியும் ஒரு சேரப் பதிவாகியுள்ளது” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
