நடிகர் விஜய் நேற்று சென்னை பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், 234 தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த மாதம் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிலையில் அந்த விழாவை சிறப்பாக நடத்தியதற்கு நன்றி தெரிவித்தும், மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக அவருக்கு போக்குவரத்து காவல்துறையினர் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். சிக்னலை மதிக்காமல் விஜய்யின் கார் சென்றதாக புகார் எழுந்ததை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.