செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் திமுகவிற்கு அவரைப் போல் களத்தில் இறங்கி வேலை செய்ய கொங்கு மண்டலத்தில் யாரும் இல்லை. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இது அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். இதனால் கொங்குவில் கட்சியை பலப்படுத்த வேண்டிய நெருக்கடியில் திமுக உள்ளது.