தூத்துக்குடியில் மானிய விலை பாரத் அரிசி விற்பனை வாகனத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். அரிசி, பருப்பு மற்றும் கோதுமை மாவு உள்ளிட்டவற்றின் வெளிச்சந்தை விலை உயர்வினை கருத்தில் கொண்டு நபார்டு மூலம் எளிய மக்கள் பயன்பெறும் விதமாக மத்திய அரசு பாரத் அரிசி என்ற பெயரில் மானிய விலை அரிசி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஒரு கிலோ அரிசி 29 ரூபாய்க்கும் கடலை பருப்பு ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. தூத்துக்குடி நகரில் விற்பனை செய்ய வந்த வாகனத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.