உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டம் லோனியில் டெல்லி- கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், பயணிகள் நிறைந்த ஆட்டோ ஒன்று திடீரென கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் தேங்கியிருந்த தண்ணீருக்கு அடியில் இருந்த பள்ளம் ஓட்டுநருக்குத் தெரியாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆட்டோ சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி கவிழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆட்டோவில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கனமழை காரணமாக அந்தச் சாலையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சாலையின் உண்மையான நிலை வாகன ஓட்டிகளுக்கு தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தண்ணீருக்கு அடியில் இருந்த பள்ளங்கள் மற்றும் சேதமடைந்த பகுதிகளை கண்டறிவது மிகவும் கடினமாக இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ, தண்ணீர் தேங்கியிருந்த பகுதியில் சென்றபோது திடீரென பள்ளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. அடுத்த சில நொடிகளில் ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது.

 

ஆட்டோ கவிழ்ந்ததும் அதில் இருந்த பயணிகள் பதற்றமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களுக்கு உதவுவதற்காக ஓடி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஆட்டோவை மீட்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதா அல்லது யாருக்காவது காயம் ஏற்பட்டதா என்பது தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், தண்ணீருக்கு அடியில் மறைந்திருந்த பள்ளம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது. சாலையின் மோசமான நிலை குறித்து உள்ளூர் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சாலை பராமரிப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கும்போது, பள்ளங்கள் இருப்பதை வாகன ஓட்டிகள் கண்டறிய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. சாலையில் உள்ள பள்ளங்களை உடனடியாக சரிசெய்து, தண்ணீர் தேங்காமல் உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பான காணொளி வைரலாகி வரும் நிலையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.