பொதுவாக காலநிலை மாற்றத்தால் இருமல் மற்றும் சளி தொடர்பான பிரச்சனைகள் அனைவருக்கும் வரும். மற்ற நோய்களுடன் ஒப்பிடும்போது இது ஒரு எரிச்சல் உணர்வை கொடுக்கும். இருமல் மற்றும் சளி பிரச்சனை வந்துவிட்டால் பெரியவர்களும் குழந்தைகள் போல சிரமப்படுவார்கள். இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண இதை உடனே பண்ணுங்க.

அதற்கு பாலை நன்றாக கொதிக்க விட்டு அதில் சிறிதளவு மஞ்சள் மற்றும் மிளகு கலந்து இனிப்புக்காக சிறிதளவு பணம் கற்கண்டு சேர்த்துக் கொண்டால் மஞ்சள் பால் ரெடியாகிவிடும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்திருப்பதால் நோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இதற்கு அதிகமாக உள்ளது. அதனைப் போலவே மிளகுக்கும் அதிக மருத்துவ சக்தி உள்ளதால் இந்த இரண்டின் கலவை சளி மற்றும் இருமலை வெகு விரைவில் தீர்க்கும்.