சென்னையில் தி.நகர், தேனாம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருவதால், தீபாவளிக்கு துணி உள்ளிட்ட பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அடுத்து 3 மணி நேரத்திற்கு (1 மணிவரை) கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, குமரி, நெல்லை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை வெளுக்கும் என்பதால் மக்கள் வெளியே செல்ல முடியாது.