தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத்பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் முக்கியமான தலைவர்களின் ஒருவர் சரத்பவார். எனவே 2024 பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து விலகும் முடிவை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.