செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி குறிவைக்கப்படுவதாக செய்தி வெளியான நிலையில், இன்று ED சோதனை மூலம் அது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சிக்கிய முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் இந்த ரெய்டு என கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் என்ன ஃபார்முலா கடைப்பிடிக்கப்பட்டதோ, அதே ஃபார்முலாவை பொன்முடி விவகாரத்திலும் (கைது நடவடிக்கை) கடைப்பிடிக்கப்படும் என கூறப்படுகிறது.