சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், இயற்கை பொருட்களால் சர்வதேச தரத்திலான சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. ஒலிம்பிக் தரத்திலான செயற்கை இழை மைதானம் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடத்தையும் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

அதன்படி மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம், ஒலிம்பிக் விளையாட்டரங்கம், புதிய செயற்கை இலை மைதானம் முதல்வர் ஸ்டாலினால்  திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட்ட பாலிகிராஸ் பாரிஸ் ஜிடி o எனும் செயற்கை இலையால் இந்த மைதானம் உருவாக்கப்பட்டது.

7வது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டிகள் சென்னையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், கொரியா ஆகிய 6 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. 16 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் நடக்கும் போட்டியை ஹாக்கி இந்தியாவுடன் தமிழக அரசு இணைந்து நடத்துகிறது. போட்டிகளை நடத்த தமிழக அரசு 17 கோடி ஒதுக்கி, அதில் 12 கோடி ஹாக்கி இந்தியாவிடம் தரப்பட்டுள்ளது.