சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து விளக்கு ஏற்றுவார். இதனைத் தொடர்ந்து 18ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற உள்ளது. ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் ஜனவரி 21ஆம் தேதியுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.