சபரிமலை ஐயப்பன் கோயிலில் 39 நாட்களில் ரூபாய் 204.30 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 39 நாட்களில் 31,43,163 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். காணிக்கையாக ரூபாய் 63.89 கோடி அரவணை பிரசாத விற்பனையில் ரூ 96.32 கோடி கிடைக்கப்பட்டுள்ளது. அப்பம் விற்பனையில் ரூ 12.38 கோடி கிடைக்கப்பட்டுள்ளது என தேவஸ்வம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் 25 வரையிலான 39 நாட்களில் 31.43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் 39 நாட்களில் ரூபாய் 204.30 கோடி வருமானம் கிடைத்துள்ளது
என தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. அன்னதான மண்டபம் மூலம் 7,25,049 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது.