இந்தியாவின் வரலாற்று வெற்றியை சந்திரயான் 3 பதிவு செய்துள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யானை சுமந்து சந்திரனின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர் அப்புசாமி என்பவர் சந்திரயான் 3 வடிவத்தில் கைத்தறி போர்வையை உருவாக்கி அசத்தியுள்ளார்.

இந்தத் திட்டத்தின் இயக்குனர் வீரமுத்துவேல் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டி இதனை பரிசளிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.