நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக சந்திரயான்-3 தொடர்பான மாபெரும் வினாடி-வினா போட்டியை பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தார். இந்த போட்டிகள் செப்டம்பர் 1 முதல் MyGov போர்ட்டலில் தொடங்கும் என்று அவர் கூறினார். மேலும் இது ஒரு சிறந்த வாய்ப்பு மற்றும் அனைத்து மாணவர்களும் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சந்திரயான்-3 குறித்து இஸ்ரோ நடத்திய வினாடி வினா போட்டியில் இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளதாக மத்திய அரசின் ‘MY GOVT INDIA’ அறிவித்துள்ளது. இந்த சாகசத்தில் கலந்து கொள்ள Mahaquiz என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். வினாடி வினாவில் பொது அறிவை வளர்த்துக்கொள்வதுடன், கேட்கப்படும் 10 கேள்விகளுக்கு 5 நிமிடத்தில் பதிலளித்து பல லட்சம் பரிசுகளையும் வெல்லுங்கள்.