சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் தனது தந்தை காலமானார். பூபேஷ் பாகேலின் தந்தை நந்த் குமார் பகோல் (89) சிறிது நேரத்திற்கு முன்பு மருத்துவமனையில் காலமானார். பாகேலின் தந்தை கடந்த மூன்று மாதங்களாக உடல் நலக்குறைவால் ராய்பூரில் உள்ள ஸ்ரீ பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இது குறித்து பூபேஷ் பாகேல் தனது தந்தையின் மரணச் செய்தியை ‘எக்ஸ்’ தளம் மூலம் அறிவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.