விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் 4 திசைகளிலும் மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி ஆகும். இங்கு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சுவாமி தரிசனம் செய்ய மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இக்கோயிலிலுக்கு பெரும்பாலான பக்தர்கள் சிரமம் பாராமல் வந்து செல்வது வழக்கம் ஆகும்.

அதே நேரம் மழை நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் சதுரகிரி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் 7ம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் நீரோடையில் குளிப்பதற்கும், இரவில் கோவிலில் தங்குவதற்கும் அனுமதியில்லை எனவும் வனத்துறை கூறியுள்ளது.