பொதுவாகவே பழங்களில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால் அனைவரும் பழங்களை சாப்பிடுவார்கள். நோயாளிகள் எதுவும் சாப்பிட முடியாத போது பழங்களை தாராளமாக உண்ணலாம். தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதனால் கோடை காலத்தில் அனைவரது வீடுகளிலும் பழங்கள் இருக்கும். ஆனால் கோடை காலத்தில் நாம் வாங்கி வைக்கும் பழங்கள் ஒரு நாள் கூட இருக்காமல் அப்படியே அழுகிவிடும். எனவே கோடை காலத்தில் பழங்களை அழுகாமல் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க சில வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பழங்கள் வாங்கி வந்தவுடன் நீங்கள் ஒரு சில்வர் பாத்திரத்தில் உப்பு மற்றும் தண்ணீர் கலவையை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பழங்களை ஒவ்வொன்றாக போட்டு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து பழங்களை வெளியே எடுத்து சிறிது தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் பழங்கள் கெட்டுப் போகாது.

பழங்கள் பழுப்பு நிறமாக மாறாமல் இருப்பதற்கு காற்று புகாத பைகளில் பழங்களை போட்டு அடைத்து வைக்கலாம். குளிர்சாதன பெட்டியில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

பழங்களில் ஆக்சிஜனேற்ற செயல்முறையை தடுப்பதற்கு பழங்களின் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை தெளித்து வைக்கலாம்.

தண்ணீரில் தேன் கலந்து வெட்டப்பட்ட பழங்களின் மேல் தெளித்து வைத்தால் அது கெட்டுப் போகாது.

முலாம்பழம், வாழைப்பழங்கள் மற்றும் தக்காளி போன்றவற்றை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். இந்த பழங்கள் பழுப்பு நிறமாக மாறுவது மட்டுமல்லாமல் பிற பழங்களையும் அதேபோல் மாற்றுவதால் இவற்றை தனியாக வைக்க வேண்டும்.