தமிழகத்தில் கோடை காலங்களில் தாக்கல் ஆகும் அவசர வழக்குகள் விசாரிக்கும் அமர்வுகள் மற்றும் எந்தெந்த நாட்களில் எந்தெந்த ஊர்களில் விசாரணை நடைபெறும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோடை காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 29 நீதிபதிகள் தாக்கல் ஆகும் வழக்குகளை விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சென்னை மற்றும் மதுரையில் மே மாதத்தில் முதல் வாரத்தில் மட்டும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதற்கான மனுக்கள் விசாரணை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மே மாதத்தின் இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது வாரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மனு தாக்கல் செய்யலாம் எனவும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அதற்கான மனுக்கள் விசாரணை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.