கலைப்படைப்புகளை பார்வையிட சென்றவர் அங்கு இருந்த படைப்பில் இருந்த வாழைப் பழத்தை திருடி சாப்பிட்டு உள்ளார். காலையில் சாப்பிடாமல் இருந்த காரணத்தால் கலைப்படைப்பில் இருந்த வாழைப் பழத்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். அதை வாழைப்பழம்தான் என நீங்கள் நினைக்கலாம். எனினும் வாழைப்பழம் இருந்த கலைப்படைப்பின் மதிப்பு சுமார் 1 கோடி ஆகும். அதுவும் அந்த கலைப் படைப்பின் முக்கியமான அங்கமே அந்த வாழைப்பழம் தான்.

அப்படிப்பட்ட படைப்பிலிருந்த வாழைப்பழத்தை தான் அவர் திருடி சாப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, காலையில் சாப்பிடாமல் வந்துவிட்டதாகவும் பசியை அடக்க முடியவில்லை என்பதால் கலைப்படைப்பில் இருந்த வாழைப் பழத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.