தமிழகத்தில் கொரோனா காலத்தில் கடைகள் மொத்தமாக அடைக்கப்பட்டன. இதனால் வியாபாரம் எதுவும் நடத்தப்படாத நிலையில் நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வியாபாரி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடைகளுக்கான வாடகை குத்தகை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கடந்த 2021 ஆம் வருடம் தீர்ப்பு தீர்ப்பளித்தது.

ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாமல் கடைகளுக்கான வாடகை குத்தகையை தள்ளுபடி செய்யவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் அந்த மனுதாரர் மனு தாக்கல் செய்திருந்தார் அதன் பிறகு மாநகராட்சி நகராட்சி மற்றும் நகர்புறம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகளுக்கான வாடகை மற்றும் குத்தகை தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.