கடந்த 2  வருடங்களாக கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் கொரோனா 4ஆம் அலை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பாக அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 12,000 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று நாடு முழுவதும் பாதிப்பும் அதிகரித்துள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 500 அதிகமான பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறையை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளார்.

இதனால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வைரஸ் தொற்றால் மீண்டும் ஊரடங்கு ஏற்படுமா என்று மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அதோடு கொரோனா கட்டுப்பாடுகளின் ஆரம்ப கட்டமான முகக்கவசம் பயன்பாடு அதிகரித்து இருப்பதால் விரைவில் ஊரடங்கு அறிவிப்பு வெளியாகும் என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது.