இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பாஜக எம்பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் இந்திய முன்னணி மல்யுத்த வீரர் குற்றம் சாட்டினார். மேலும் வீராங்கனைகள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த ஜனவரியில் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டனர்.

இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மலியுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று துவங்கிய போராட்டமானது இரவிலும் நீடித்தது. அதனை தொடர்ந்து இன்றும் போராட்டம் நடந்து வரும் நிலையில், தங்கள் போராட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் ஆதரவு தரலாம் என வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்..