மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபர் இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் கமலேஷ் என்ற நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உயிரிழந்து விட்டதாகவும் அவர்களே இறுதி சடங்குகளை செய்ததாகவும் அதிகாரிகள் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு கமலேஷ் வீட்டிற்கு வந்ததால் குடும்பத்தினர் ஆச்சரியமடைந்துள்ளனர். கமலேஷ் தான் இறக்கவில்லை என்றும் அகமதாபாத்தில் உள்ள ஒரு கும்பலின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் தற்போது அங்கிருந்து தப்பித்து வந்ததாகவும் கூறி குடும்பத்தினரை நெகிழ வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.