கொடைக்கானலில் இ – பாஸ் முறையை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் அனைத்தையும் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும் என ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இ – பாஸ் முறைக்கு ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஹோட்டல் சங்கத்தினரின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், சீசனில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் ஆண்டு முழுவதும் பிழைப்பு நடத்துவதாகவும் கொடைக்கானல் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.