சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு இயக்கப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் நிலை குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் ஆய்வு மேற்கொள்கிறார். மேலும் இனி ஏற்காட்டிற்கு தகுதி உள்ள வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். முன்னதாக 3 தினங்களுக்கு முன்பு தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.