சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், நோய் தொற்றை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கே.பி அன்பழகன் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை முறையாக வெளியிடவில்லை என கே.பி அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  3 ஆண்டுக்கும் குறைவான தண்டனை வழங்கும் பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிந்ததால் ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.