கடந்த 19ஆம் தேதி பூமிகா என்ற பெண் உபர் நிறுவனத்தின் கால் டாக்ஸியில் பயணம் செய்து உள்ளார். ஆனால் அவர் பயணம் முடிந்த பிறகும் அந்த கால் டாக்ஸியை ஓட்டி வந்த டிரைவரிடம் இருந்து பூமிக்காவிற்கு தொடர்ந்து பல மெசேஜ்கள் வந்துள்ளது. தங்களுடன் நண்பராக வேண்டும் என்று கோரிக்கை வைத்து அந்த டிரைவர் மெசேஜ் அனுப்பி உள்ளார்.

இதனால் பெண்களின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் அடைந்த பூமிகா அந்த மெசேஜ் ஸ்கிரீன் ஷாட்களை எக்ஸ் வலைதள பக்கத்தில் உபர் நிறுவனத்தை டேக் செய்து பதிவிட்டுள்ளார். மேலும் அவர் இது போன்ற செயல்களால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அச்சம் எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.