மும்பையின் புறநகர் பகுதியான போரிவலியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ரோஹித் ரத்தோடு என்ற இளைஞர் திருடுவதற்காக சென்றுள்ளார். அங்கிருந்த ஒரு வீட்டில் அவர் திருட முயற்சித்தபோது அதே பகுதியில் குடியிருந்த ஒருவரால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடு்த்து காவல்துறையினர் விரைந்து வந்த போது அவர்களிடமிருந்து தப்புவதற்காக ரோஹித் திருட வந்த வீட்டின் சமையலறை ஜன்னல் வழியாக இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து தப்பிய ரோகித் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அவர் குதித்த இடத்தில் அவரது உடைந்த இரண்டு பற்கள் கிடைத்துள்ளது. மேலும் அவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்த காவல்துறையினர் பல மருத்துவமனைகளில் ரோஹித்தை தேட துவங்கினர். இந்நிலையில் 4 மாதங்கள் கழித்து மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக ரோஹித் வந்த போது காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.