மெக்சிகோ நாட்டில் உள்ள சிடேட் ஒபெகன் பகுதியில் நேற்று அதிகாலை கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திடீரென நுழைந்த மர்மகும்பல் கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 26 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மர்ம கும்பலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.