கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா  ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 11 மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களில் 11 செண்டி மீட்டர் வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.