குடிநீர் வசதி கேட்டு தூத்துக்குடி மக்கள் வைத்த கோரிக்கையை உடனே நிறைவேற்றினார் நடிகர் விஷால். இயக்குனர் ஹரியுடன் மூன்றாவது முறையாக இணைந்து விஷால் நடிக்கும் திரைப்படம் ‘விஷால் 34’. முன்னதாக இவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வெற்றியடைந்தது. வசூல் சாதனையை குவித்ததது.

இந்நிலையில்  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெறும் விஷால் 34 படப்பிடிப்பு தளத்தில், M.குமாரசக்கனாபுரம் ஊராட்சி தலைவரும் பொதுமக்கள் நடிகர் விஷாலை சந்தித்து, குடிநீர் வசதி செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர். உடனே, ஆழ்துளைக் கிணறு ஏற்படுத்தி 2 பெரிய டேங்க் அமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.