கன்னட நடிகர் கேஜிஎப் யாஷின் பிறந்தநாளில் ரசிகர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள கடக் மாவட்டத்தில் நடிகர் யாஷின் 38 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் அவருக்காக கட் அவுட் வைத்துள்ளனர். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதால் ஹரிஜன் முரளி மற்றும் நவீன் ஆகிய மூன்று பேர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.