சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே இனிப்பு வகைகளை அதிகமாக சாப்பிடுவதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. கெஜ்ரிவால் ஜாமின் கோரிய வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலம் அவர் ஜாமின் பெற முயற்சிப்பதாக அமலாக்கதுறை கூறியது. அதற்கு, மருத்துவர்களின் பரிந்துரைப்படியே உணவு உட்கொள்வதாக கெஜ்ரிவால் தரப்பு விளக்கமளித்தது.