நடிகை தமன்னா திருவனந்தபுரத்தில் உள்ள லுலு மாலுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க  சென்று இருந்தார். அப்போது அவரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவர்களை பார்த்து கையசைத்தபடியே நடிகை தமன்னா சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது திடீரென்று ரசிகர்கள் கூட்டம் தமன்னாவை சூழ்ந்து செல்பி எடுத்ததால் கூட்டத்தில் தமன்னா சிக்கினார்.

அப்போது ரசிகர்கள் சிலர் அவரை தவறாக தொட முயற்சித்து, கையை பிடித்தும் இழுத்தனர். அதிர்ச்சியான தமன்னா ரசிகர்களை பார்த்து கோபமாக கத்தினார். இதனையடுத்து பாதுகாவலர்கள் ரசிகர் கூட்டத்தை அப்புறப்படுத்தி தமன்னாவை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.