மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவுடன் கடைசி வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் பாமக அதிமுகவோடு 7+1 தொகுதி பங்கீட்டை நிறைவும் செய்தது. ஆனால், திடீரென்று தமிழக அரசியலையே புரட்டிப்போடும் விதமாக ஒரே இரவில் முடிவை மாற்றிய பாமக, பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது.

இதனால் கோபமடைந்த 34 வன்னியர் கூட்டமைப்பினர் இன்று அதிமுகவில் இணைந்தனர்.  இந்நிலையில், இப்படி திடீரென கூட்டணி மாறிய பாமகவுக்கு தர்மம் நல்ல பதிலை கொடுக்கும் என்று  அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.