பிரபல நடிகை வித்யா பாலனுக்கும் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூருக்கும்  கடந்த 2012ம் வருடம் திருமணம் நடைபெற்றது. ஆனால் இவர்களுக்கு இதுவரையும் குழந்தை இல்லை. ஆனால் சமீபத்தில் விமான நிலையத்தில் ஒரு குழந்தையுடன் ரசிகர்களுக்கு காட்சி கொடுத்தார் வித்யாபாலன். எனவே வித்யாபாலனுக்கு இரகசியமாக  என்றும் அதுவும் பெண் குழந்தை என்று தகவல் பரப்பினார்கள்.

இதற்கு விளக்கம் கொடுத்த வித்யா பாலன் அது என் சகோதரியின் மகள் ஐரா. என் சகோதரிக்கு இரட்டை குழந்தைகள் இருக்கிறார்கள். சகோதரியின் இரட்டைக் குழந்தைகள் மீது அதிகமாக பாசம் வைத்திருப்பேன்.   அவரை பார்த்தவர்கள் வேறு மாதிரி பேசி விட்டார்கள் என்று ஓபனாக கூறியுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் வித்யா பாலனுக்கு மகள் இருந்தால் கண்டிப்பாக வெளியில் தெரியவரும் என்று கருத்துக்களை பலரும் பதிவு செய்து வருகிறார்கள்.