தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவருடைய கணவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் சுந்தர் சி. இந்த தம்பதிகளுக்கு இரு மகள்கள் இருக்கும் நிலையில் நடிகை குஷ்பூ தன்னுடைய மகள்களின் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ஒருவர் குஷ்புவின் மகள்கள் இருவரும் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

இது தொடர்பான பதிவை குஷ்பூ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு 20 மற்றும் 22 வயது ஆகும் பெண்கள் எதற்காக சர்ஜரி செய்து கொள்ள வேண்டும். குழந்தைகளையும் ட்ரோல் செய்வது வெட்கக்கேடான செயல். மேலும் குழந்தைகளையாவது விட்டு வையுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.