இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் பொருட்டு 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 06.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டெர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இந்த வெற்றியை நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சமயத்தில் பிறந்த மூன்று ஆண் ஒரு பெண் என நான்கு குழந்தைகளுக்கு பெற்றோர் சந்திரயான் என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில் இந்தியா சாதனை புரிந்த நாளில் குழந்தை பிறந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.