எஸ்.ஜே.சூர்யாவின் ‘அன்பே ஆருயிரே’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிலா. இவர், ’மருதமலை’, ‘ஜாம்பவான்’, ‘லீ’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ’ஜாம்பவான்’ படத்தில் நடித்தபோது குளியல் காட்சியில் நடிக்க நிலா 12,000 லிட்டர் மினரல் வாட்டர் கேட்டு பிரச்னை செய்ததாக அந்தப் படத்தின் இயக்குநர் நந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.

அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், தொட்டிக்குள் மூழ்குவது போன்ற ஒரு காட்சியில், மினரல் வாட்டர் இருந்தால்தான் குளிப்பேன் என நிலா கூறினார். நாங்கள் அதற்கு மறுத்ததால் சூட்டிங்கில் இருந்து பாதியில் நிலா கிளம்பிவிட்டார் என அவர் தெரிவித்தார்.