தமிழ் சினிமாவில் ஓகே கண்மணி, திருச்சிற்றம்பலம், மெர்சல், காஞ்சனா 2, இருமுகன் உள்ளிட்ட பட படங்களில் நடித்தவர் நித்யா மேனன். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது திருமணம் குறித்து கருத்துகள் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ள நித்யா மேனன், திருமண விஷயத்தில் பெற்றோர் தனக்கு முழு சுதந்திரம் கொடுத்ததாகவும், தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தன் மனதிற்கு பிடித்த ஒருவர் கிடைத்துவிட்டால் உடனே திருமணம் தான் என அவர் தெரிவித்தார்.