திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பத்தூரை சேர்ந்த புண்ணியகோடி என்பவர் அஜித்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது 5,250 கொடுத்தால் விலை உயர்ந்த செல்போன் தருவதாக தெரிவித்தார்.

இதனை நம்பி அஜித் பணத்தை அனுப்பினார். ஆனால் கூறியபடி புண்ணியகோடி செல்போனை அனுப்பவில்லை. பணத்தையும் தரவில்லை. அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதுகுறித்த அஜித் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.