பேங்க் ஆப் பரோடா வங்கி பெண்களுக்கான சிறப்பு திட்டம் ஒன்றை தொடங்கியிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் கணக்கு திறக்கும் பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதோடு இன்னும் பல வசதிகளும் கிடைக்கும். இந்த கணக்கில் 25 லட்சம் வரை வைத்திருக்கலாம். எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் தான் இதில் சிறப்பம்சம். பெண்களுக்கான இரண்டு சேமிப்பு கணக்குகளை இந்த வங்கி தொடங்கி இருக்கிறது. மகிளா சக்தி சேமிப்பு கணக்கு மற்றும் மஹிளா பவர் நடப்பு கணக்கு. இந்த கணக்கின் கீழ் 2024 ஜூன் 30-ம் தேதி வரை பயன் பெறலாம்.

இந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வங்கியில் இருந்து அனைத்து விதமான வசதிகளும் கிடைக்கும். இதில் 25 லட்சம் ஓவர் டிராப்ட் பெரும் வசதியும் உள்ளது. இந்த வங்கியில் கணக்கு தொடங்கும் பெண்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் கிடைக்கும். மற்ற திட்டங்களை விட இருசக்கர வாகனங்களுக்கு 0.25%, கல்வி கடன் 0.15 சதவீதம், கார் மற்றும் வீட்டு கடன் 0.10 சதவீதம் வரை குறைவாக இருக்கும். செயலாக்க கட்டணங்களும் தள்ளுபடி கிடைக்கும். ஒரு லட்சம் வரை தினசரி டெபாசிட்டுக்கு கட்டணம் கிடையாது. ஒவ்வொரு காலாண்டிலும் விமான நிலைய ஓயவறை வசதி கிடைக்கும். பிளாட்டினம் டெபிட் கார்டில் 20 லட்சம் வரை காப்பீடு இலவசமாக கிடைக்கும்.