சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டம் பங்கார் என்ற கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பிர்சு ராம் (33) என்பவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் இவரின் தம்பி பீம் சயாம்க்கு அண்ணியின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதற்கு தனது அண்ணன் இடையூறாக இருப்பதாக நினைத்து அண்ணன் குடிபோதையில் இருந்த போது கழுத்தை நெறித்து தம்பி கொலை செய்துள்ளார். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தற்போது போலீசார் அவரை கைது செய்த தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.